விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் இலங்கையில் உள்ளதாக சிங்கள ஊடகம் தகவல்

ltte_FLAGதமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார்.

கடந்த வாரம் மீனவ படகு ஒன்றின் ஊடாக மன்னார் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது இந்தியாவுக்கு சென்றிருந்த ஜெயந்தன், அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார்.

அவரது மனைவியும் இறுதி செயற்பாட்டின் போது இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர் தற்போது பிள்ளைகளுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.

இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினருக்கு பலத்த எதிர்ப்பை காட்டிய படையணிகளில் ஜெயந்தன் தலைமையிலான படையணி முக்கியமானதாகும்.

ஜெயந்தன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஊடாக மன்னாருக்கு வந்து சென்றுள்ளார். இதன்போது மன்னாரில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகளின் ஒரு தொகை பணத்தையும் கொண்டு சென்றுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஜெயத்தன் என்பது விடுதலை புலிகளினால் அவருக்கு வழங்கப்பட்ட பெயராகும். இந்நிலையில் அவரது உண்மையான பெயர் மோகனதாஸ் என்பதனை இந்த நாட்களில் பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜெயத்தனின் சகோதரி ஒருவர் இந்தியாவின் பெங்களூர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அவரது மகனின் திருமணத்திற்காக லண்டனில் இருந்து ஜெயந்தன் பணம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசாரணைக்கு மத்தியில் தற்போதுவரையில் புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமையினால் ஜெயந்தனின் வருகை மற்றும் இவர் எதற்காக வருகைத்தந்துள்ளார் என்பது தொடர்பில் பாதுகாப்பிற்கு பிரிவிற்கு தகவல் கிடைக்கவில்லை என திவயின மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

 -tamilwin.com
TAGS: