பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி

pakistan1பாகிஸ்தானில் உறவினரால் துப்பாக்கிமுனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணிற்கு உள்ளூர் ஷரியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ரஜன்பூர் பகுதியில் அமைந்துள்ளது பாதிக்கப்பட்ட 19 வயதான இளம்பெண்ணின் குடியிருப்பு.

சம்பவத்தன்று குடியிருப்பில் தூக்கத்தில் இருந்த குறித்த இளம்பெண்ணை அவரது உறவினர் ஒருவர் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் அறிவுரைப்படி உள்ளூர் பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை விசாரித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் அளித்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளம்பெண் வேண்டும் என்றே உறவினரை பாலியல் உறவுக்கு தூண்டியதாகவும், சமூக ஒழுக்கத்திற்கு எதிராக விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை விபச்சாரி என அறிவித்து அவருக்கு சாகும்வரை கல்லால் அடிக்கும் மரண தண்டனையை விதித்துள்ளனர்.

மட்டுமின்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் மீது விசாரணை அல்லது நடவடிக்கை தேவை இல்லை எனவும் முடிவுக்கு வந்துள்ளனர்.

பஞ்சாயத்தாரின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அந்த இளம்பெண் அன்றைய தினமே அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாலியல் பலாத்காரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி உரிய விசாரணை நடத்தாமல் மரண தண்டனை விதித்த பஞ்சாயத்தாருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும் இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த நபர் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-lankasri.com