வீரமரணமடையும் போராளிகளுக்கு சொர்க்கத்திற்கான பாஸ்போர்ட் வழங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

001சிரியாவின் ரக்கா பகுதியில் போரிட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லாத சொர்க்கத்திற்கான பாஸ்போர்ட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தலைநகர் என அறிவிக்கப்பட்ட பகுதியாகும் ரக்கா. .ரக்கா பகுதியில் ஆசாத் மற்றும் ரஷ்யா கூட்டுப்படைகளுக்கு எதிராக ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் கூட்டுப்படைகளின் அதிரடியான தாக்குதல்களுக்கு ஈடுதர முடியாமல், இதுவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல பகுதிகளில் இருந்தும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சிரியா ராணுவம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், அவர்களுக்கு விசித்திரமான பல ஆவணங்களும் கிட்டியுள்ளது.

அதில், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு அதன் அமைப்பு வழங்கிய பாஸ்போர்ட்டும் உள்ளடங்கும். பயங்கரவாதிகள், கூட்டுப்படைகளின் நெருக்கடிக்கு அஞ்சாமல் துணிந்து போரிடும் வண்ணம் அந்த அமைப்பானது அவர்களை பலவகையில் ஊக்குவித்து வந்துள்ளது.

அதில், போரில் வீரமரணமடையும் போராளிகளுக்கு சொர்க்கத்தில் கன்னிகளுடன் வாழும் வெகுமதி அளிக்கப்படும் என்பதாகும். அதற்கென்று போரில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு சொர்க்கத்திற்கான பாஸ்போர்ட் (passports to Paradise) என்ற பெயரில் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

பெரும்பாலும் தற்கொலைப்படை தாக்குதலுக்கு அனுப்பப்படும் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளதும் வெளியாகியுள்ளது.

சாதாரண நாடுகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் விடும் பாஸ்போர்ட்டுகள் போன்றே ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பாஸ்போர்ட்டும் அமைந்துள்ளது.

ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் அமைந்துள்ள இந்த பாஸ்போர்ட்டானது பச்சை வண்ணத்தில் தங்க நிற எழுத்துக்களால் அச்சிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டின் முகப்பில் ‘No God but Allah, Muhammed is the Messenger of God’ என தங்க வண்ணத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

-dailythanthi.com