சிங்களத்தின் காதில் பூ வைத்துவிட்டு கரும்புலிகளுக்கு அஞ்சலி செய்த தமிழ் மக்கள்

மட்டக்களப்பில் உள்ள மாவடி முன் மாதிரிக் கிராமத்தில் உள்ள, கரும்புலிகள் நினைவு இடத்தை திடீரென துப்பரவு செய்த அவ்வூர் மக்கள். அங்கே சுடர் ஏற்றி கரும்புலிகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தியுள்ளார்கள். முன்னர் இதுபோல அவ்விடத்தை துப்பரவு செய்ய மக்கள் முற்பட்ட வேளை, அதனை சிங்கள ராணுவத்தினர் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

ஆனால் எமது பிள்ளைகளுக்கு வீர வணக்கம் செலுத்த எவன் தடைபோடுவது ? என்ற இறுமாப்பொடு , அவ்வூர் மக்கள் இம் முறை துப்பரவு செய்து, மலர்களை தூவியும், சுடர் ஏற்றியும் மரியாதை செலுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

-athirvu.com

TAGS: