காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு

missingமுல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை தேடி நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த நிலையில் இன்று கிறிஸ்தவ மத குருமாருடன் இணைந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் எங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

காணாமல் போன எமது பிள்ளைகளை தமது பிள்ளைகளாகவே தாங்கள் கருதுவதாக வெளிநாட்டு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எமது பிள்ளைகளை கண்டு பிடிக்கும் வரை நாங்கள் தொடர்ந்துள்ள எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 -tamilwin.com
TAGS: