500 உடல்கள் தலை துண்டாக சிதறி கண்டுபிடிப்பு!! எப்போது எப்படி நடந்தது ? அதிரும் பின்னணி

mosulஈராக்கில் 2 புதை குழிகளில் 500-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்ட 500 உடல்கள் கண்டுபிடிப்பு பாக்தாத்: ஈராக்கில் கடந்த 2014-ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியது. அப்போது ஈராக்கின் 2-வது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனி நாடு உருவாக்கினார்கள்.

தற்போது அமெரிக்க ராணுவம் உதவியுடன் ஈராக் ராணுவம் மொசூல் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை மீட்டது. அதை தொடர்ந்து அங்கு ராணுவம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. மொசூல் அருகே படவுஸ் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு 2 மிகப் பெரிய புதை குழிகள் இருந்தன. அவற்றை ராணுவ வீரர்கள் தோண்டி ஆய்வு மேற்கொண்டனர். அந்த 2 புதை குழிகளிலும் 500-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. அவை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. ஒரு குழியில் 470 உடல்களும்,

மற்றொரு குழியில் 30 உடல்களும் புதைக்கப்பட்டிருந்தன. இவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டு தண்டனை நிறை வேற்றப்பட்டவர்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 2014-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி படவுஸ் சிறையில் 600 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

-athirvu.com