இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றமல்ல; சிறு குற்றமே: பஷில்

“இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றவை போர்க்குற்றங்கள் அல்ல. அவை, சிறு குற்றங்களே. ஆகவே, போர்க்குற்றங்கள் என்று கூறுவதை அனைவரும் கைவிட வேண்டும்.” என்று முன்னாள் அமைச்சரான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதவது, “தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தேடித் தந்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமே. ஆகவே, எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும். அதனூடு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். குறிப்பாக, காணாமல் போனவர்கள் தொடர்பிலான விடயங்களுக்கு தீர்வு காணுவோம்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: