காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் – பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்டுக்கும் இடையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்வும், தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பிரித்தானிய அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

-puthinamnews.com

TAGS: