யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம்: இதுவரை 81 பேர் சிக்கினர்; 75 பேருக்குப் பிணை

யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம்: இதுவரை 81 பேர் சிக்கினர்; 75 பேருக்குப் பிணை

“யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் முயற்சியாக கடந்த சில நாட்களில் மட்டும் பொலிஸாரால் 81 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மிகுதி 75 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.”

இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

“சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கை தொடரும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடி அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பொலிஸ் குழு அமைக்கப்பட்டது. தினமும் மாலை நேரங்களிலிருந்து நள்ளிரவுவரை இந்தச் சுற்றி வளைப்பும் தேடுதலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-tamilcnn.lk

TAGS: