கிளிநொச்சியில் மட்டும் 2,841 பேர் காணமல் போயுள்ளனர்!

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 2,841 பேர் காணாமல் போயுள்ளனர் என்று கிளநொச்சி பிரதேச செயலக பணிமனைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்த பின்னர் போரினால் பாதிக்கபட்ட 21 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 66 ஆயிரத்து 240 பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர்.

இங்கு 4 ஆயிரத்து 604 விதவைப் பெண்களும் ஆயிரத்து 368 அங்கவீனர்களும் உள்ளனர். 244 சிறார்கள் தமது தாய், தந்தையரை இழந்து ஆதரவற்றுள்ளனர் என்று தரவுகள் மூலம் தெரிய வருகின்றது.