வடக்கு மாகாண ஆளுநரின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் எதிர்ப்பு!

யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை அனைவரும் மறந்துவிட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யுத்த காலத்துக் குற்றங்களை அனைவரும் மறக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கூறுவதன் மூலம், அவர் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கின்றாரா? என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநரை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் அண்மையில் சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம், ரெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com

TAGS: