நாம் கேட்காத தமிழீழத்தை பொய்ப் பிரசாரங்கள் மூலம் மஹிந்த அணி பெற்றுக்கொடுக்க முயற்சி: இரா.சம்பந்தன்

“நாம் கேட்காத தமிழீழத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தேர்தல் காலத்துப் பொய்ப் பிரசாரங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது (இன்று திங்கட்கிழமை) நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதாவது, “நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும், இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும். தேர்தல் பிரசாரத்தில் தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர். ஆகவே நாம் கேட்காத தமிழீழத்தை பொதுஜன பெரமுனவினர் பிரசாரத்தின் மூலமாக பெற்றுகொடுக்கவே முயற்சித்து வருகின்றனர்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: