செளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது

செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கான தடை இன்னும் ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ள நிலையில், ஏழு பெண்கள் உரிமை வழக்கறிஞர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கைதுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், இதனைப் பெண்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சி என செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டதாக செளதி அரசு செய்தி தொலைக்காட்சி கூறியுள்ளது. -BBC_Tamil