காணமல் போனோர் அலுவலகம் எமக்கு தேவையில்லை! காணாமல் ஆக்கபபட்டவர்களின் உறவுகள்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று காலை 9 மணிமுதல் இடம்பெற்று வருகிறது

இந்நிலையில் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவுகள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்தை பார்வையிட்ட்டவாறு மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் வந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது குறித்த மக்களுடன் கலந்துரையாடிய காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் அவர்களை குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு இருப்பினும் உறவுகள் அதற்க்கு மறுப்பு தெரிவித்த நிலையில் தாங்கள் தமது கலந்துரையாடலை நிறைவு செய்து மீண்டும் தாங்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் வந்து தங்களுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்து சென்றனர்

இதனை தொடர்ந்து அவர்களுடைய போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

-athirvu.in

TAGS: