‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’யாழில்ஆர்ப்பாட்டம்

‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’ எனத் தெரிவித்து யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் அரங்கேறிய பாடசாலை மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து இன்றும் (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நகரில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’, ‘காட்டுப்புலம் என்ன கால் வைக்க முடியாத பகுதியா?’,

ஆகிய சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-tamilcnn.lk

TAGS: