வான் அசிசா: அன்வார் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் நான் ஒதுங்கிக் கொள்வேன்

டாக்டர்   வான்  அசிசா   வான்   இஸ்மாயில்   எதிர்வரும்    பிகேஆர்    கட்சித்    தேர்தல்களில்    அவரின்  கணவர்   அன்வார்   இப்ராகிம்   பிகேஆர்    தலைவர்   பதவிக்குப்   போட்டியிடுவாரானால்   தாம்   போட்டியிட   மாட்டார்.

அன்வார்  போட்ட்யிடவில்லை   என்றால்  மட்டுமே   அவர்   தலைவர்   பதவிக்குப்   போட்டியிடுவார்.

“அவர்  போட்டியிட்டால்    நான்   (போட்டியிட)  மாட்டேன்,  என்றவர்   மலேசிய  இன்சைட்   இணையச்  செய்தித்தளத்திடம்   கூறினார்.

பிகேஆர்  கட்சித்   தேர்தல்கள்   ஆகஸ்ட்   இறுதியில்   நடக்கும். ஆனால்,  வேட்பாளர்   நியமனம்  ஜூலை   29-இல்.

இதனிடையே,   பிகேஆரில்   தம்  ஆதரவாளர்கள்,   தம்   கணவரின்    ஆதரவாளர்கள்    என  இரண்டு   அணிகள்    செயல்பட்டு  வருவதாகக்  கூறப்படுவதை    கிட்டத்தட்ட  20  ஆண்டுகளாக  கட்சியின்   தலைமைப்  பொறுப்பை    வகித்து  வரும்   வான்  அசிசா   மறுத்தார்   என்று   மலாய்  மெயில்   செய்தி   வெளியிட்டுள்ளது.

“அசிசா  அணி  அன்வார்  அணி   என்றெல்லாம்  எதுவும்  கிடையாது.  யார்   வேண்டுமானாலும்  தலைவர்   பதவிக்குப்   போட்டியிடலாம்”,  என்றார்.