விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ..

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரனை விட பாரிய தவறுகளை செய்தவர்கள் பதவியிலிருக்கும் நிலையில் துள்ளும் மீன் இருக்க நெத்தலிக்கு தண்டனையா? என ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் விஜயகலாவிற்கு ராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவியை வழங்குவதற்கு தான் சிபாரிசு செய்வதாக கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீ. ஆனந்த சங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: