பனிமனிதனின் கடைசி உணவு

சுமார் 5,300 ஆண்டுகளுக்கு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தாலியில் 1991ஆம் ஆண்டு பனிப்பாறைகளுக்கு நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த நபரின் உடலை ஆய்வு செய்ததில், ஆட்டுக் கொழுப்பு, மான் கறி, பழங்கால கோதுமை மற்றும் புதர்களில் விளையும் சில தாவரங்கள் ஆகியவற்றை அவர் கடைசியாக உண்டது தெரியவந்தது.

அந்த உணவில் தற்போதைய வழக்கமான 10%ஐ விடவும் அதிகமான கொழுப்பு இருந்தது. ஓட்ஸி எனப் பெயரிடப்பட்ட அவரது உணவில் இருந்த கொழுப்பின் அளவு 50%.

-BBC_Tamil