மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்?

கடந்த சில ஆண்டுகளாக எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவிகள் குறைந்து வருவதால், அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் ஆபத்தான சூழல் நிலவி வருவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிலை தொடரும் பட்சத்தில், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. நோய் தொற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கை அடைய முடியாது என்று ‘தி லான்செட்’ என்ற ஆய்விதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-BBC_Tamil