பூஜ்டிமோன் மீதான பிடியாணை ரத்து

ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணத்தின் முன்னாள் அதிபரான சார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அவரது நான்கு ஆதரவாளர்கள் மீதான ஐரோப்பிய கைதாணையை திரும்ப பெறுவதாக அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கேட்டலோனியா சுதந்திரத்துக்காக கிளர்ச்சியை உண்டாக்கியதாக பூஜ்டிமோன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்வதற்காக அவரை ஸ்பெயினிடம் ஒப்படைக்க முடியாது என்று ஜெர்மனின் நீதிமன்றம் ஒன்று தெரிவித்திருந்தது. -BBC_Tamil