வெப்ப அலை, எச்சரிக்கும் அரசு

ஜப்பானில் வெப்ப அலை காரணமாக ஏறத்தாழ 30 பேர் பலியானார்கள். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் கோளாரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மத்திய ஜப்பானில் வெப்ப அளவு 40.7 டிகிரி செல்சியஸை எட்டி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மத்திய மற்றும் மேற்கு ஜப்பானில் பெய்த பெருமழையின் காரணமாக நூற்றுகணக்கானோர் மரணமடைந்தனர். -BBC_Tamil