பறிபோகிறது வவுனியா! குடியேற்ற விபரத்துடன் சத்தியலிங்கம் அவசர கடிதம்!

யுத்தகாலத்திலும்,யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனால்வவுனியாமாவட்டத்தின்இனப்பரம்பலானதுமாற்றமடைந்துவருகின்றது.

இந்தநடவடிக்கைதொடருமானால்திருகோணமலை,அம்பாறை,மாவட்டங்களின் நிலைதான் வவுனியாவிற்கும்ஏற்படுமென வடக்குமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயம்தொடர்பில்எதிர்க்கட்சிதலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவசரக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

வவுனியாவடக்குபிரதேசசெயலகப்பரிவு

வவுனியாவடக்குபிரதேசசெயலகத்திற்குட்பட்டமகாவலி எல் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த ஆட்சியில் நன்கு திட்டமிட்ட வகையில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நடந்தேறியுள்ளன.

கி.சே.பிரிவு- கிராமம் -வாக்காளர் எண்ணிக்கை
வெடிவைத்தகல்லு வெகரதென்ன 25
பதவியபடிவம்-1 (கம்பிலிவெள) 94
போகஸ்வெள-1 495
போகஸ்வெள-2 137
கஜபாபுர 111
மொனரவெள 186
மாயாவெள 213
கல்யாணபுர-1 355
நாமல்புர 75
சதாஹரித்தகிராமம் 01
எத்தாவெட்டுனுவெள 747
நிக்கவெளஇடது சம்பத்கம 116
றணவிருகம 62
நிக்கவெளஇடது (இசுறுபுர) 07
நிக்கவெளஇடது (சங்கபோபுர) 00
நிக்கவெளஇடது 365
நிக்கவெளவலது நிக்கவெளவலது 598
சப்புமல்தன்ன 315

வவுனியாவடக்கில்மொத்தமாகஇதுவரையில் 4083 வாக்காளர்களை உள்ளடக்கியதாக குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள கச்சல்மகிளங்குளம் எனப்படும் கைவிடப்பட்டகுளம் கடந்தவருடம் அனுராதபுர மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக் களத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்டு குளத்திற்கு கீழாக காணப்படும்நீர்ப்பாசனக்காணிகள்குடியேற்றவாசிகளுக்குவழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இக்குளத்திற்குமிகவும்அண்மையிலுள்ள கொக்கச்சாங்குளம் எனஅழைக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீககாணிகள் கலாபோகஸ்வ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு வேறுமாவட்டங்களில் இருந்து சிங்களமக்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாபிரதேசசெயலகப்பரிவு

வவுனியாபிரதேசசெயலகப்பரிவிலும்திட்டமிட்டபெரும்பான்மையினக்குடியேற்றங்கள்நடைபெற்றுள்ளது. மருதங்குளம்கிராமஅலுவலர்பிரிவிலுள்ளகிராமங்களில் 1005 வாக்காளர்உள்ளடங்கலாக குடும்பங்கள் குடியேற்றப்பட்டள்ளனர்

கி.சே.பிரிவு – கிராமம் – வாக்காளர்என்ணிக்கை
மருதங்குளம் நாமல்கம 194
சலலிகினிகம 264
நந்தமித்திரகம 547
மொத்தம் 1005

வவுனியாபிரதேசசெயலகப்பரிவில்மொத்தமாகஇதுவரையில்1005வாக்காளர்களைஉள்ளடக்கியதாககுடும்பங்கள்குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

செட்டிகுளம்பிரதேசசெயலகப்பரிவு

செட்டிகுளம்பிரதேசசெயலகபிரிவில்பாவற்குளம்கிராமஅலுவலர்பிரிவில் 151 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. செட்டிகுளம்பி.செ. பிரிவுக்குட்பட்ட கிராமமாக இருந்தபோதும் வவுனியா தெற்கு சிங்களபிரதேசசெயலாளர் பிரிவுக்குஉள்வாங்கப்பட்டுஅவர்களால் 151 குடும்பங்களுக்கு காணிவழங்குவதற்காக பட்டியல் தயாரிக்க ப்பட்டது. அத்துடன் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 40 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இவர்கள்அனைவரும் அனுராதபுரம் மாவட்டத்தில் வதியும் இராணுவக் குடும்பங்களாகும்.

கி.சே.பிரிவு கிராமம் வாக்காளர்என்ணிக்கை
பாவற்குளம் பாவற்குளம் 151 குடும்பம்

இதேபோன்றுமாணிக்கம்பண்ணை (மெனிக்பாம்) பகுதியில் 2009ம் ஆண்டு இறுதியுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கு பயன் படுத்தப்பட்ட இடைத்தங்கல்முகாம்அமைந்த 1089 ஏக்கர்காணியும்தற்போதுஇராணுவத்தின்கட்டுப்பாட்டில்உள்ளது.

இந்தகாணிஅரசகாணியென்றுகுறிப்பிடப்பட்டிருந்தாலும்நீண்டகாலமாகசெட்டிகுளம்பிரதேசமக்களால்பருவகாலப்பயிர்ச்செய்கைக்காகபயன்படுத்தப்பட்டதாகும். எனினும்நாட்டின்அசாதாரணசூழ்நிலைகாரணமாகமக்களுக்கானகாணிஅனுமதிப்பத்திரங்கள்வழங்கப்படவில்லை.

இடைத்தங்கல்முகாமாகபயன்படுத்தப்பட்டபோதுஅனைத்துஉட்கட்டுமானவசதிகளும்இப்பகுதியில்செய்யப்பட்டிருந்தது. (உள்ளகவீதிகள், மின்னிணைப்பு, கிண றுகள்) தற்போதுஇக்காணியின்ஒருபகுதியில்இராணுவமுகாம்அமைக்கப்பட்டுள்ளதுடன்இராணுவத்தினரால்நடாத்தப்படுகின்றவிலங்குபண்ணை, விவசாய பண் ணைகள்நடாத்தப்பட்டுவருவதுடன்; இராணுவத்தினரால்உல்லாசவிடுதியும்அமைக்கப்பட்டுள்ளது.

இக்காணியில்பெருந்தொகையானசிங்களக்குடியேற்றம்செய்வதற்கானஏற்பாடுகள்நடைபெற்றுவருவதாகஅறியமுடிகின்றது. இதற்குமேலதிகமாக 146 ஏக்கர் பொது மக்களுடைய காணிகள்அரசபடைகளின்பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மல்வத்துஓயா (கீழ்மல்வத்துஓயாநீர்த்தேக்கதிட்டம்) இத்திட்டமானதுஅனுராதபுரம்-வவுனியா மாவட்டங்களினூடாக ஊடறுத்துபாயும் அருவியாற்றை மறித்து தந்திரிமலைபிரதேசத்தில்அணைக்கட்டொன்றைஅமைப்பதினூடாகஉருவாக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தைநடைமுறைப்படுத்தும்போதுஅனுராதபுரமாவட்டத்தின்மதவாச்சிபிரதேசசெயலகபிரிவிலுள்ளஒருபகுதிகாணிகளும், வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகபிரிவிலுள்ளசின்னசிப்பிக்குளம்கி.சே.பிரிவிலுள்ள 1430 ஹெக்ரேயர் காணியும் சுவீகரிக்கப்பட்டவுள்ளது. அத்துடன் 05 சிறியகுளங்களும்மேட்டுக்காணி 11ஏக்கர், வயற்காணி 625.75 ஏக்கரும்உள்ளடக்கப்படுகின்றது.

இதனால்பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்குமாற்றுகாணியாகமுதலியார்குளம்கி.சே.பிரிவில்கப்பாச்சிகிராமத்தில் 1000 ஏக்கர்காணி ஒதுக்கி தருமாறு கீழ்மல்வத்து ஓயாதிட்ட பணிப்பாளரால்பிரதேசசெயலாளருக்குகோரிக்கைமுன்வைக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம்பிரதேசசெயலகபிரிவில் 11 ஏக்கர்மேட்டுக்காணியும், 625.75 ஏக்கர்வயற்;காணியுமாகமொத்தமாக 636.75 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ள நிலையில் மாற்றுக் காணி வழங்குவதற்காக 1000 ஏக்கர்காணிபிரதேசசெலாளரிடம்கோருவதன்நோக்கமென்ன.

அத்துடன்இதுவரையில்இத்திட்டம்தொடர்பானவிடயங்கள்பிரதேசஒருங்கிணைப்புக்குழுகூட்டங்களில்கலந்துரையாடப்படவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

எனவே இதுதொடர்பில் அரசதலைவருடன் பேசிதிட்டமிட்ட வகையில் நடைபெறும் இனப்பரம்பலை பாதிக்கும் செயலினை தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு தங்களை தயவாக கேட்டுக்கொள்கின்றேன்என்றுஅந்தக்கடிதத்தில்மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

-eelamnews.co.uk

TAGS: