19 வயது மாணவனை கொன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறியாட்டம்..

சிரியாவின் சுவைடா மாகாணத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்களில் 19 வயது மாணவனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுவைடா மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளுக்குள் கடந்த மாதம் 25-ம் தேதி நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

பெரும்பாலும் பெண்கள் உள்பட 30-க்கும் அதிகமானவர்களை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிடிபட்ட பெண்களை உயிருடன் எரித்துக்கொல்லப் போவதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

பிணைக்கைதிகளை விடுவிக்க அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், கடத்திச் செல்லப்பட்டவர்களில் முஹன்னட் தவுக்கான் அபு அம்மர் என்னும் 19 வயது மாணவனை கொன்றுவிட்ட பயங்கரவாதிகள் அவரது பிரேதத்தின் படங்களை தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

-athirvu.in