10 லட்சம் முஸ்லிம்களை சிறையில் அடைத்து சீனா சித்ரவதை?

ஒரு கோடி இன சிறுபான்மையினர் வாழும் சின்ஜியாங்கில் 10 லட்சம் உய்கூர் முஸ்லிம்களை சீனா கைதுசெய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை கூறுகிறது.

அந்த பிரதேசத்தில் நிலவும் அமைதியின்மைக்கு இஸ்லாமியவாத தீவிரவாதிகளை, பிரிவினைவாதிகளை சீனா குற்றஞ்சாட்டுகிறது.

தடுப்பு முகாம்களிலுள்ளோர் அதிபர் ஷி ஜின்பிங்குக்கு விசுவாசமாக இருக்க கட்டாயப்படுத்தப்படுவதாக தெரிகிறது.

சட்டபூர்வமற்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் கைது செய்வதை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா சீனாவை கோரியுள்ளது. -BBC_Tamil