இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் கடலென திரண்ட தமிழர்கள்!

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும்.ஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

-http://eelamnews.co.uk

TAGS: