“சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன தாக்குதலே முக்கிய காரணம்”

சிரியாவில் ஏழாண்டுகளாக நடந்து வரும் அரசு எதிர்ப்பு படைகளுக்கெதிரான தாக்குதலில் இதுவரை 3,50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இப்போரில் அந்நாட்டின் அதிபர் பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கிவிட்டதாக கருதப்படுகிறது.

பலம் பொருந்திய அரசு எதிர்ப்பு படைகளை அல்-அசாத் எப்படி சமாளித்தார்? என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், பிபிசி பனோரமாவும், பிபிசி அரபிக் சேவையும் சேர்ந்து நடத்திய கூட்டு புலனாய்வில், அசாத்தின் வெற்றிக்கு பின்னால் ரசாயன ஆயுதங்கள் பெரும் பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2014-2018ஆம் ஆண்டுகாலத்தில் 106 இரசாயன தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அதிகபட்சமாக 2014ஆம் ஆண்டு 30 ரசாயன தாக்குதல்களை சிரியா அரசு படைகள் நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான தாக்குதல்கள் அரசு எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹமாஸ், இட்லிப், அலெப்போ, கூட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளதாகவும் பிபிசியின் இந்த புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. -BBC_Tamil