அமெரிக்க தலைவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியவர் கைது

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஜனநாயக மற்றும் லிபரல் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தலைவர்களுக்கு 12-க்கும் அதிகமான மர்ம பார்சல்கள் மற்றும் வெடிகுண்டுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இதுபற்றி விசாரணை நடத்தி வந்த அமெரிக்க ஐக்கிய புலனாய்வு துறையினர் நியூயார்க் நகரில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை கைது செய்தனர். இந்த தகவலை அமெரிக்க நீதித்துறை செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

அவரை விசாரணைக்காக புலனாய்வு துறையினர் புளோரிடாவுக்கு அழைத்து சென்றிருப்பதாக அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

-dailythanthi.com