தாக்குதல்களை அதிகரித்தது தலிபான்

ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் ஆயுததாரிகள், ஹஸராஸ் சிறுபான்மையினர் வாழும் ஜகோரி மாவட்டத்தில், தமது தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் அதிகரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாகத் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இத்தாக்குதல்கள் அறிவித்துள்ளன.

நேற்று முன்தினம் மாத்திரம், ஜகோரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 15 பொதுமக்களும் 10 படையினரும் கொல்லப்பட்டனர் என, அப்பகுதிக்கான பொலிஸார் தெரிவித்தனர்.

-tamilmirror.lk