ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதல்களில் 69 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக லக்மன், நன்கர்ஹர், பக்டிக்கா, காஸ்னி, மைடான் வர்டக், கந்தஹார், உருஸ்கான், ஃபரா, கோர், டக்ஹர், ஃபர்யாப், ஹேம்லன்ட், நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 69 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 20 பயங்கரவாதிகள் காயங்களுடன் பிடிபட்டனர் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் இருந்த தலிபான்களின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

-athirvu.in