இஸ்ரேல் – ஹமாஸ் பரஸ்பர தாக்குதல்: நான்கு பேர் பலி – பதற்றத்தில் காஸா மற்றும் பிற செய்திகள்

காஸா பகுதியில் உள்ள ஆயுத குழு 200க்கும் மேற்பட்ட ஏவுணைகளை கொண்டு தாக்கியதால், நாங்கள் ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் கொண்டு பாலத்தீனத்தை தாக்கினோம் என்கிறார்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். மூன்று இஸ்ரேலிகள் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும், இஸ்ரேலிய ராணுவம் தாக்கியதில் ஒரு தாயும் அவரது குழந்தையும் மரணித்தது உட்பட நான்கு பாலத்தீனியர்கள் இறந்ததாக கூறுகிறார்கள் காஸா அதிகாரிகள்.

இஸ்ரேல் - ஹமாஸ் பரஸ்பர தாக்குதல்: என்ன நடக்கிறது காஸாவில்?

ஏப்ரல் மாதம் இஸ்ரேலில் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் அமைதி உடன்படிக்கையை மீறி நடந்துள்ளது. -BBC_Tamil