முஸ்லீம் தீவிரவாத தலைவர்களான ரிஷாட், ஹிஸ்புல்லாஹவுக்கெதிராக சிங்கள அமைப்புக்கள் எடுத்த அதிரடி முடிவு!

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியகட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இராவணா பலய மற்றும் சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் தேரர்கள் குழுவொன்று இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாடுகள் தற்போது விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-athirvu.in

TAGS: