அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது: இரா.சம்பந்தன்

“அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் மற்றும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் குறித்த விடயத்தில் அரசாங்கம் எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியளித்ததன் பிரகாரம் அரசியல் தீர்வும் அதனுடன் கூடிய அபிவிருத்தியும் சமநிலையில் பயணிக்க வேண்டும். வடக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது, ஆனால் வெறுமனே அபிவிருத்தியைக் காட்டி எமது மக்களின் நீண்டகால அரசியல் தீர்வைப் பின்தள்ள முயற்சிக்கக் கூடாது.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: