தேசத்துரோகி மதவாதி ரிஷாட்; வவுனியாவில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்!

வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட்பதியூதினுக்கு எதிராக பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மதவாதி தேசதரோகி றிஷாட் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கவும் என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டு வவுனியா மணிக்கூட்டு கோபுரம் தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துடன் ரிசாட் பதியுதீனுக்கு நெருக்கமானவர்களும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந் நிலையில் ரிசாட்டை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என தெரிவித்து பதாதைகள் வவுனியாவில் காணப்படுகின்றமை குறிப்படத்தக்கது.

-athirvu.in

TAGS: