யாழில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி: பதற்றமான சூழல்!

யாழ்ப்பாணம் பலாலி வசாவிளான் பகுதியில் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக இராணுவதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் இராணுவ வீரர் ஒருவர்உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இராணுவத்தினர் சென்ற ட்ரக் வண்டி குண்டுவெடிப்பில் சிக்கியதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இரண்டு இராணுவத்தினரும் யாழ்போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-athirvu.in

TAGS: