கருக்கலைப்பு; குருணாகல் வைத்தியர் ஷாபியைத் தொடர்ந்து பதுளை முஸ்லிம் வைத்தியர் மீதும் முறைப்பாடு!

பதுளை வைத்தியசாலையில் மேற்கொள்ளளப்பட்ட சத்திர சிகிக்சைகள் தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இது தொடர்பில் இந்த இரு பெண்களும் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் வைத்தியர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டே இவர்கள்31ஆம் திகதி இந்த முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதேவேளை, 4000 பெண்களுக்கு கருத்தடை சிகிச்சையளித்த குற்றச்சாட்டு தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவருக்கு எதிராக 400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த வகையில் தற்போது பதுளை வைத்தியசாலையிலும் இது போன்ற சந்தேகத்துக்கிடமான சத்திரசிகிச்சைகள் குறித்து பெண்கள் முறைப்பாடு செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-athirvu.in

TAGS: