ஹிஸ்புல்லாவுக்கு சஹ்ரானுடன் தொடர்பு; பொலிஸில் முறைப்பாடு செய்த தமிழ் தலைவர்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் என கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தினைச் சேர்ந்த ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்

இந்த முறைப்பாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தற்கொலை குண்டுதாரியான சஹ்ரா னுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளார் எனவும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங் களில் உலாவுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் உள்ள தொடர்பினை கண்டுபிடிக்குமாறு தனது முறைப்பாட்டினை செய்துள்ளதாக அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: