இது நடந்தால் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள்: இரத்த ஆறு ஓடும்; ஹிஸ்புல்லா துணிச்சல் பேச்சு!

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று நான் கூறியது உண்மைதான் என உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சாட்சியமளித்திருந்தார்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இதை எதிர்த்து முஸ்லிம் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என அன்று கூறியிருந்தேன். அவர்கள் ஆயுதம் ஏந்தினால் இரத்த ஆறு ஓடும்.

அதனால்தான் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால் கட்டாயம் இரத்த ஆறு ஓடும் என்று கூறியிருந்தேன். நான் அன்று கூறியது உண்மையே எனவும் தெரிவித்திருந்தார்.

இதன் போது இடைமறித்த தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர், பொறுப்புள்ள அரசியல் தலைவர் இப்படிக் கூறலாமா?என வினவியதற்கு ஹிஸ்புல்லா மௌனமாக இருந்தார்.

-athirvu.in

TAGS: