ரஷ்யாவிற்கு உதவி கரம் நீட்டிய அமெரிக்கா!

ரஷ்யா வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, அமெரிக்கா உதவி கரம் நீட்டியுள்ளது.

அந்நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளான சைபீரியா, அல்டாய், செலியாபின்ஸ்க் உள்ளிட்ட இடங்களில் சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது.

இதனால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ராணுவ வீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சைபீரியா வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்று நன்றி தெரிவித்த புதின், தேவைப்பட்டால் உதவி கோருவதாக தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியது.

இந்த உரையாடலை உறுதி செய்துள்ள வாஷிங்டன் வெள்ளை மாளிகை, இரு தலைவர்களும் ரஷ்யாவில் பற்றி எரியும் காட்டுத்தீ குறித்தும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்தும் பேசியதாக தெரிவித்துள்ளது.

-https://athirvu.in