மூன்றாவது கோவிட்-19 மரணத்தை MOH உறுதிப்படுத்தியது

மூன்றாவது கோவிட்-19 மரணத்தை MOH உறுதிப்படுத்தியது

கோவிட்-19 பாதிப்பு தொடர்பாக மூன்றாவது இறப்பை சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் ‘நோயாளி 152’, தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்ட 58 வயதான உள்ளூர் நபர் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“Crisis Preparedness and Response Centre (CPRC) இன்று மாலை 6.27 மணியளவில் ஒரு கோவிட்-19 மரணம் குறித்த அறிக்கையைப் பெற்றுள்ளது. மொத்த கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை மூன்றாகப் பதிவுசெய்கிறது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.