கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்கள் பதிவாகவில்லை

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை இலங்கையில் 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில், 07 பேர் நேற்று குணமடைந்ததை அடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,048 ஆக உயர்வடைந்துள்ளது

tamilMirror