தொற்றாளர் எண்ணிக்கை 3123ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3123 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்து நாட்டை வந்தடைந்த நபரொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை, அவர்களில் 2925 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 186 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதுவரை இலங்கையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamilmirror