5,218 புதிய நேர்வுகள், மரண எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,218 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 57 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,001 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 4,744 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 451 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,989), நெகிரி செம்பிலான் (629), கோலாலம்பூர் (469), சரவாக் (409), பேராக் (400), சபா (258), ஜொகூர் (243), கெடா (194), மலாக்கா (183), பஹாங் (111), லாபுவான் (108), கிளந்தான் (101), பினாங்கு (88), திரெங்கானு (23), புத்ராஜெயா (8), பெர்லிஸ் (5).

மேலும் இன்று, 22 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.