இன்றும் கரையொதுங்கிய கழிவுகள்

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து இன்றும் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி உள்ளன.

ஆறு பைகள், பிளாஸ்டிக் பெட்டிகள், பெரிய பிளாஸ்டிக் பைகள் என பல கழிவுப்பொருட்கள் இன்று (10) காலை இரத்மலானை, மொரட்டுவ மற்றும், அங்குலான கடற்கரையிலும் கரையொதுங்கி உள்ளன.

தற்போது நிலவும் காற்றுடன் கூடிய காலநிலையால் இந்த கழிவுகள் மீண்டும் கரையொதுங்கி உள்ளன.

இந்த ஆறு பிளாஸ்டிக் பைகளும் அங்குலான பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு கடலோர பாதுகாப்பு துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamilmirror