9,105 புதிய நேர்வுகள், சிலாங்கூரில் மட்டும் 4,682

கோவிட் 19 | இன்று நாட்டில், 9,105 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 91 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,158 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 5,194 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 455 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (4,682), கோலாலம்பூர் (1,247), நெகிரி செம்பிலான் (541), ஜொகூர் (392), கெடா (382), பஹாங் (300), மலாக்கா (278), சபா (271), சரவாக் (270), பினாங்கு (243), பேராக் (207), கிளந்தான் (150), லாபுவான் (54), புத்ராஜெயா (49), திரெங்கானு (38), பெர்லிஸ் (1).

மேலும் இன்று, 19 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 13 பணியிடத் திரளைகள் ஆகும்.