ஏமனில் சவுதி படை போர் விமானங்கள் தாக்குதல்

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டணி படையின் போர் விமானங்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு குண்டுகளை பொழிந்து வருகின்றன.

மாரிப், ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள மாரிப் பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி படையின் போர் விமானங்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு குண்டுகளை பொழிந்து வருகின்றன.  இதனால் அந்த பகுதியில் அவர்களுடைய ஆதிக்கம் குறைந்து வருகிறது.

அவர்கள் முன்னேறி செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது.  கடந்த சில நாட்களில் கிளர்ச்சியாளர்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர் என உள்ளூர் ராணுவம் தெரிவித்து உள்ளது.

dailythanthi