பகாங், மற்றும் ஜொகூரில் கன மழை எச்சரிக்கை

மலேசிய வானிலை ஆய்வு மையம் பகாங் மற்றும் ஜோகூரில் நாளை வரை கடுமையான மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

ரோம்பின் (பகாங்) மற்றும் மெர்சிங் (ஜோகூர்) ஆகிய இடங்களில் கடுமையான மற்றும் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பெக்கான் (பஹாங்), அதே போல் ஜொகூரில் உள்ள செகாமாட், குளுவாங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய இடங்களிலும் தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது.