சுகாதார அமைச்சகம் நேற்று 26,534 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.
இது ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 3,872,135 ஆகக் கொண்டு வந்தது. செயலில் உள்ள நேர்வுகள் 304,148 ஆக உள்ளன.
சுகாதார அதிகாரிகள் நேற்று 95 புதிய இறப்புகளைப் பதிவு செய்தனர், அதில் 23 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 33,994 ஆக உள்ளது.
மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:
சிலாங்கூர் (7,217)
கோலாலம்பூர் (2,892)
கெடா (2,391)
பினாங்கு (2,324)
ஜொகூர் (2,241)
சரவாக் (1,867)
நெகிரி செம்பிலான் (1,547)
பேராக் (1,296)
கிளந்தான் (1,212)
பகாங் (1,055)
திரங்கானு (826)
மலாக்கா (635)
சபா (591)
பெர்லிஸ் (186)
புத்ராஜெயா (183)
லாபுவான் (71)
சிலாங்கூர் (21), ஜொகூர் (16), பேராக் (14), கெடா (10), பினாங்கு (8), சபா (5), மலாக்கா (4), பகாங் (4), பெர்லிஸ் (4) நெகிரி செம்பிலான் (3), சரவாக் (3), கிளந்தான் (2) மற்றும் திரங்கானு (1) ஆகிய இடங்களில் நேற்று 95 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன
கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இந்த மாதத்தில் 1,245 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஒப்பிடுகையில், கடந்த மாதம் 771 இறப்புகளும் ஜனவரியில் 491 இறப்புகளும் இருந்தன.
8,213 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 376 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

























