இ’லாப நோக்கற்ற’ நிறுவனதிற்கு 4 டோல் நெடுஞ்சாலைகள் கைமாறின!

ஒரு புதிய இலாப நோக்கற்ற நிறுவனமான, அமானத் லெபுஹ்ரயா ரக்யாட் பெர்ஹாட்( ALR), கிள்ளான்  பள்ளத்தாக்கில் உள்ள நான்கு நெடுஞ்சாலைகளை நிர்வகிக்கும்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் பாடில்லாஹ் யூசோப் , ALR இந்த நான்கு நிறுவனங்களையும் வாங்க முன்வந்துள்ளது என்றார்.

சம்பந்த பட்டவர்களுடன் தொடர்பு கொண்டபோது இந்த நான்கு நிறுவனங்களும் இந்த சலுகையை ஒப்புக்கொண்டது தெரியவந்துள்ளது.

இன்று, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், LDP, SMART, SPRINT மற்றும் Kesas நெடுஞ்சாலைகளுக்கான டோல் கட்டணங்கள் இனி உயர்த்தப்படாது என்று அறிவித்தார்.

தற்போதுள்ள சுங்கவரி கட்டணங்கள் அந்தந்த சலுகைக் காலம் முடியும் வரை இருக்கும் இந்த நெடுஞ்சாலைகளுக்கான கட்டணச் சலுகைகளை மறுசீரமைப்பதற்கான ஒரு முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்மாயில் கூறினார்.