கெட்டு போன உணவால் நோய்: ஜொகூர் பாருவில் உணவகம் மூடப்பட்டது

ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, மாநில சுகாதாரத் துறை உணவுத் தூய்மையின் அளவு திருப்திகரமாக இல்லை என்று கண்டறிந்தது. அந்த உணவகத்தை ஒரு நச்சு உணவு  நோயாளருடன்இணைக்கும் ஒரு வைரல் வீடியோ கிளிப்பைத் தொடர்ந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 15 -இல்  ஒரு வாடிக்கையாளர் கடையில் ரொட்டி சாப்பிட்ட பிறகு வைரலானதாகக் கூறப்படும் நச்சு உணவு   வீடியோவைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தியதாக மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் தியான் சூன்(Ling Tian Soon) தெரிவித்தார்.

அதன் தூய்மையின் அளவு திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டு மூட உத்தரவிடப்பட்டது.

உணவு சுகாதார விதிமுறைகள் 2009 ஐ மீறிய குற்றங்களுக்காக உணவு சட்டம் 1983 இன் பிரிவு 32 பி இன் கீழ் இந்த கடைக்கு மூன்று நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

“ஜொகூர் பாரு மாவட்ட சுகாதார அலுவலகம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  நச்சு உணவு நோய்களை இன்னும் தீவிரமாக கண்காணித்து வருகிறது”.

“சுகாதாரத்தின் அளவு திருப்திகரமாக இருக்கும் உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்  நச்சு உணவு அபாயத்தைக் குறைக்க பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று லிங் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நச்சு உணவு சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற  நச்சு உணவுத்தன்மையின் அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடி சிகிச்சையைப் பெறுவதற்கும், சாப்பிடுவதற்கு முன் “தோற்றம், வாசனை மற்றும் சுவை,” ஆகியவற்றைப் பயிற்சி செய்யுமாறு லிங் சமூகத்திற்கு அறிவுறுத்தினார்.