ரணிலை எதிர்த்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பிரதமரும் பதில் அதிபருமான ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

‘ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும். நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள வாக்களிப்பின்போது அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படக்கூடாது, ரணில் விக்ரமசிங்காவுக்கு யாரும் வாக்களிக்க கூடாது’ போன்ற கருத்துக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களாக அங்கு எழுப்பினர்.

ரணில் விலக வேண்டும்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க மதத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெல்வத்தை சந்தியிலிருந்து கொப்பரா சந்தி வரை பேரணியாகச் சென்று மீண்டும் தெல்வத்தை சந்தியை வந்தடைந்தனர்.

நீர்கொழும்பு கோட்டா கோ கம கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது

 

 

-ibc